சர்வதேச முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. இந்த வாரத்தின் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் உள்ளது.
சர்வதேச முதலீட்டு சந்தையில் மந்த நிலை நிலவும் காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வளர்ச்சி அடையும் வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்ய தயாரான நிவையில், 100க்கு 90 பேரின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது.
உலக நாடுகளில் ரெசிஷன் அச்சம் தலைவிரித்தாடும் நிலையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமாக உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர்.

இதன் மூலம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 137 வர்த்தக நாட்களுக்கு பின்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்த நிலையில் சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்ச அளவான 63588.31 புள்ளிகளை அடைந்துள்ளது.
ஆனால் அடுத்த சில நிமிடத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், சில வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் வரலாற்று உச்ச அளவீட்டை பணமாக்க முடிவு செய்து அதிகப்படியான பங்கு இருப்பை விற்பனை செய்ய துவங்கினர். இதனால் 11.18 மணியளவில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிவுடன் 63,326 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 63,467 புள்ளிகளில் துவங்கி, 63588.31 புள்ளிகள் வரையில் உயர்வு வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. சென்செக்ஸ் குறியீடு 52 வார உயர்வு, வரலாற்று உச்சம் அளவான 63588.31 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் நேற்று 7 வருட உச்சத்தை தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்குகள் இன்று மோசமாகவும், அதிகப்படியாகவும் 1.06 சதவீதம் சரிந்து 576.90 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகியவை 0.50 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.
மேலும் பவர் கிரிட் 2.33 சதவீத வளர்ச்சி உடன் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியது. ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, எல் அண்ட் டி, விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை 0.50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
நிஃப்டி குறியீடு 4.75 புள்ளிகள் சரிந்து 18,811.95 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டி குறியீட்டில் பைனான்சியல் சர்வீசஸ், மீடியா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், ஆயில் அண்ட் கேஸ் குறியீடுகள் உயர்வுடன் உள்ளது.
சென்செக்ஸ் 21000 புள்ளிகளின் பெருக்கலில் இயங்கி வருகிறது,. 21000, 42000, 63000 புள்ளிகள், அடுத்த ஸ்டாப் 84000 புள்ளிகளில் தான். என்னை பொறுத்த வரையில் அடுத்த 2 வருடத்தில் சென்செக்ஸ் 84000 புள்ளிகளை தொட்டு விடும், 100000 புள்ளிகள் தான் இந்த தலைமுறை முதலீட்டாளர்களின் முக்கிய மைல்கல் ஆக இருக்கும் என விஜய் கேடியா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications