மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் வியாழக்கிழமை 36,596 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 11,000 புள்ளிகளை மீண்டும் கடந்துள்ளது.
புதன் கிழமை சந்தை முடியும் போது அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் இருந்ததால் பிளாட்டாக சந்தை முடிந்து இருந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் முதலீடுகள் அதிகரித்துள்ளது.
காலை 11:30 மணி நிலவர படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 338.76 புள்ளிகள் என 0.94 சதவீதம் உயர்ந்து 36,606.98 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 106.15 புள்ளிகள் என 0.97 சதவீத உயர்ந்து 11,054.45 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ், யெஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் எல்&டி நிறுவனப் பங்குகள் லாபத்தினை அளித்து வருகிறன. அதே நேரம் விப்ரோ, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஐடிசி, மஹிந்தரா & மஹிந்தரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.