10,000 புள்ளிகளை தொட்டது நிஃப்டி.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ஜிஎஸ்டி கவுன்சில் கார்கள் மீதான வரி விதிப்பை மாற்றியதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான வர்த்தக உயர்வை சந்தித்தது. இதனால் ஆகஸ்ட் 7ஆம் தேதி வர்த்தகத்திற்கு பின் இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான உயர்வை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெற்றுள்ளது.

ஐஐபி மற்றும் பணநீக்கம்

ஐஐபி மற்றும் பணநீக்கம்

செவ்வாய்க்கிழமை ஜூலை மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தகவல் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியாகுவதால், இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.

ஆசிய சந்தைக்கு வாய்ப்பு

ஆசிய சந்தைக்கு வாய்ப்பு

இர்மா புயல் மற்றும் வட கொரியா அச்சுறுத்தல்களின் காரணமாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகமும், முதலீடும் செய்யப்பட்டது.

இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டு சென்செக்ஸ் உயர்வடைந்தது.

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கூடுதலான உயர்வை சந்தித்து. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 194.64 புள்ளிகள் உயர்ந்து 31,882.16 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டை போல் தொடர் வர்த்தக உயர்வில் இருந்த நிஃப்டி குறியீடு 71.25 புள்ளிகள் உயர்ந்து 10,006.05 புள்ளிகளை அடைந்தது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் இருக்கும் 30 நிறுவனங்களில் இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா, இன்போசிஸ், சன் பார்மா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், பார்தி ஏர்செல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+