வங்கி, எனர்ஜி, நிதியியல், ஆட்டோமொபைல், ஐடி மற்றும் டெக் ஆகிய துறைகளில் இன்று முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைப் பெற்ற நிலையில் இன்று காலை முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு நிலையான வர்த்தக உயர்வைச் சந்தித்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முதலீட்டாளர்களைப் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்ய வழி வகுத்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 261.76 புள்ளிகள் உயர்ந்து 34,924.87 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 91.30 புள்ளிகள் உயர்ந்து 10,605.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஒஎன்ஜிசி, டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, ஆதானி போர்ட்ஸ், இன்டஸ்இந்த் வங்கு ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.