வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய சந்தையும் அதிகளவிலான வர்த்தகச் சரிவையைப் பெற்றது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த 3 நாட்களில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் நேற்று மீண்டும் முதலீடு செய்யத் துவங்கிய நிலையில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் சுமார் 1000 புள்ளிகள் அளவிலான சரிவை சந்தித்தது. இதுவே இன்றைய சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 407.40 புள்ளிகள் குறைந்து 34,005.76 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 121.90 புள்ளிகள் குறைந்து 10,454.95 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் நிறைவடைந்தது.