உலக நாடுகளின் மத்திய வங்கிகள் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மும்பை பங்குச்சந்தை 2 நாள் தொடர்ந்து சரிந்து 6.57 லட்சம் கோடி இழப்பையும், 2 மாத்தில் மோசமான சரிவைப் பதிவைச் செய்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 151.12 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும் 2 நாள் சரிவில் பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகளவில் உள்ளது.
முதலீட்டாளர்கள்
19ஆம் தேதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அடுத்த ரவுண்ட் வட்டி விகிதம் கணிப்பைக் காட்டிலும் விரைவாக வரும் என்ற அச்சம் அதிகரித்த காரணத்தால் அதிகப்படியான பங்குகளை மும்பை பங்குச்சந்தையில் விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றினர்.
திங்கட்கிழமை சரிவு
இந்தச் சரிவு திங்கட்கிழமை வர்த்தகத்திலும் எதிரொலித்துச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 872 புள்ளிகள் சரிந்தது. வெள்ளி மற்றும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 1524 புள்ளிகளையும், நிஃப்டி 465 புள்ளிகளை இழந்தது.
மொத்த மூலதன மதிப்பு
இதன் விளைவு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது மொத்த மூலதன மதிப்பு 2 நாளில் 6.57 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 280.50 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 273.95 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
17-18 சதவீத உயர்வு
ஜூன் 17-க்கு பின்பு அன்னிய முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம், விலைவாசியில் உருவான தற்காலிக சரிவு ஆகியவற்றின் மூலம் ஆகஸ்ட் 18 வரையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 17-18 சதவீதம் வரையில் உயர்ந்தது.
பெடரல் ரிசர்வ் வங்கி
இதேவேளையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் அதிகரித்து, அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவானது.
டாலர் ரூபாய்
அனைத்தையும் தாண்டி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த காரணத்தால் இறக்குமதி பொருட்களின் விலையும் பெரிய அளவில் உயர்ந்தது. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு கடந்த 5 நாளில் 5.36 சதவீதம் சரிந்துள்ளது. டாவ் ஜோன்ஸ் குறியீடு 2.54% சரிவு, எஸ் அண்ட் பி குறியீடு 3.55% சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் இரண்டு நாள் தொடர் சரிவுக்கு உள்நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தாண்டி சர்வதேச சந்தையில் உலக நாடுகளின் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி அளவுகள் மற்றும் இதைச் சமாளிக்க மத்திய வங்கி எடுக்கும் மாறுபட்ட முடிவுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கலவையான மனநிலையை உருவாக்கியுள்ளது.
சியோல், டோக்கியோ, ஹாங்காங்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் சியோல், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கிடையில் சீனாவின் மத்திய வங்கி தனது நாணய கொள்கை முடிவில் தனது வட்டி விகிதத்தை 3வது முறையாகக் குறைத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் ஏற்கனவே 2 முறை வட்டியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2 மாதத்தில் மோசமான சரிவு
இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தையில் நேற்று பதிவான 872 புள்ளிகள் சரிவு என்பது 2 மாதத்தில் பதிவான மோசமான சரிவாக உள்ளது. இந்தச் சரிவுக்கு அடித்தளமே பலவீனமான குளோபல் மார்கெட் மற்றும் அதிகரித்து வரும் டாலர் இன்டெக்ஸ்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications