இன்று காலை அமர்வில் இந்திய பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்தில் காணப்பட்டன. ஆனால் முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 19.69 புள்ளிகள் குறைந்து, 51,329.08 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 6.50 புள்ளிகள் குறைந்து, 15,109.30 ஆகவும் முடிவடைந்துள்ளது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்து 72.88 ரூபாயாக முடிவடைந்துள்ளது. முந்தைய அமர்வில் 72.96 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஒஎன்ஜிசி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஐஓசி, எம்&எம், டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஒஎன்ஜிசி, டைட்டன் நிறுவனம், லார்சன், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், எம்&எம், பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சந்தையில் பலத்த செல்லிங் பிரசர் இருந்ததால் இந்திய சந்தைகள் ஏற்றத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியாமல், இன்று சரிவில் முடிவடைந்துள்ளன. அதோடு ஐரோப்பிய சந்தைகள், அன்னிய முதலீடு வெளியேற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் சந்தை சரிவினைக் கண்டது.
அதோடு ஆட்டோ, பார்மா மற்றும் மீடியா, பார்மா பங்குகள் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளன. எனினும் வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
.