வரலாற்றில் மிகப் பெரிய உச்சத்தினைத் தொட்ட சென்செக்ஸ், நிப்டி..!

அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் புதிய உச்சத்தினை அளித்துள்ளன. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் மூன்ற் நாட்களில் இரண்டு முறை புதிய உச்சத்தினைத் தொட்டுச் சாதனை படைத்துள்ள நிலையில் விரைவில் 37,000 புள்ளிகளைத் தொட வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா மதிப்பு சரிந்து இருந்தும் வெளிநாட்டு முதலீட்டாலர்கள் திங்கட்கிழமை 259.7 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்த நிலையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 124.82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். எனவே செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையின் நிலவரம் என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சந்தை நிலவரம்

சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 106.50 புள்ளிகள் என 0.29 சதவீதம் உயர்ந்து 36,825.10 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 49.55 புள்ளிகள் என 0.45 சதவீதம் சரிந்து 11,134.30 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நிலவரம்

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையில் எனர்ஜி மற்றும் வங்கி துறைகளைத் தவிற பிற துறைகள் எல்லாம் லாபம் அளித்துள்ளன. அடிப்படை பொருட்கள் துறை 3.73%, மெட்டல் துறை பங்குகள் 2.87 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் 2.56 சதவீதமும் லாபம் அளித்துள்ளன. அதே நேரம் எனர்ஜி 0.01%, வங்கி துறை 0.13% சரிவை சந்தித்துள்ளது.

 லாபம் அளித்த நிறுவனங்கள்

லாபம் அளித்த நிறுவனங்கள்

எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், வேதாந்தா, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், இன்போசிஸ் பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

நட்டம் அளித்த பங்குகள்

ரிலையன்ஸ், விப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர்,பஜாஜ் ஆட்டோ, கோடாக் வங்கி, ஹீரோ மோட்டொ கார்ப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+