மும்பை பங்கு சந்தை குறியீடு இன்று 37,000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனையினைச் செய்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் புதிய உச்சத்தினைத் தொட்டுச் சாதனை படைத்தது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பை டிரம்ப் திரும்பப் பெறுவதாகக் கூறியதை அடுத்து ஆசிய பங்கு சந்தை உயர்வைச் சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவையும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 126.41 புள்ளிகள் என 0.34 சதவீதம் உயர்ந்து 36,984.64 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 35.30 புள்ளிகள் என 0.32 சதவீதம் சரிந்து 11,167.30 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
வங்கி, நிதி, பினான்ஸ், பவர் மற்றும் யூட்டிலிட்டி துறை சார்ந்த பங்குகள் லாபம் அளித்த நிலையில் ஐடி, மெட்டல், டேக் மற்றும் நுகர்வோர் விருப்பமான பொருட்கள் மற்றும் சேவைகள் துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, எண்டிபிசி நிறுவன பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
விப்ரோ, டிசிஎஸ், எல்&டி, ஏசியன் பெயிண்ட், யெஸ் வங்கி, மாருதி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.