வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதல் மந்தமாக இருந்த இந்திய பங்குச்சந்தையில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தலின் எக்ஸிட் போல்ஸ் இன்று மாலை வெளியாகும் நிலையில் 2.15 மணிக்குப் பின்னர் லாபகரமான நிலைக்குச் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்தது.
மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்திர பிரதேசம் மாநில தேர்தலின் முடிவுகள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதால், சந்தையில் மிகப்பெரிய நிலையற்ற தன்மை தெரிகிறது.
இதன் எதிரொலியாகத் தான் இன்றைய வர்த்தக முடிவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 27.19 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 28,929.13 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 2.70 புள்ளிகள் உயர்ந்து 8,927.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.