டிசிஎஸ், இன்ஃபோசிஸ் பங்குகள் உயர்ந்தாலும் சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் மெட்டல் துறை பங்குகள் சரிவை சந்தித்தன. அதே நேரம் இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சிரிய அளவில் உயர்ந்து பிளாட்டாக முடிந்தன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் பணவீக்க தரவுகள் போன்ற காரணங்களால் பிளாட்டாக உள்ள நிலையில் இன்றைய பங்கு சந்தை நிலவரம் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.
இன்றைய பங்கு சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 26.31 புள்ளிகள் என 0.07 சதவீதம் உயர்ந்து 36,265.93 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 1.05 புள்ளிகள் என 0.01 சதவீதம் உயர்ந்து 10,948.30 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்துவரையில் ஐடி பங்குகள் 2.38 சதவீதமும், டெக் துறை பங்குகள் 1.94 சதவீதமும், ரியாலிட்டி துறை பங்குகள் 0.55 சதவீதமும் உயர்ந்தன. அதே நேரம் மெட்டல், அடிப்படை பொருட்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஆட்டோ மொபைல் துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோமொபைல், இந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
கோல் இந்தியா, வேதாந்தா குழுமம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.