உத்தரபிரதேச தேர்தலில் பிஜேபி-யின் வெற்றிவாய்ப்பு சிறப்பாக இருந்த நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகளின் மந்தமான வர்த்தகம், அடுத்த வாரத்தில் நடக்க இருக்கும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஆகியவை இந்திய பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 48.63 புள்ளிகள் சரிந்து 28,999.56 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் தொடர் மந்தமான வர்த்தகத்தில் 16.55 புள்ளிகள் சரிந்து 8,946.90 புள்ளிகள் வரை சரிந்தது.