செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தையில் 500 புள்ளிகள் வரையில் உயர்ந்தாலும் இந்திய சந்தையில் இன்று பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவுமில்லை.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தாலும், சில மணிநேரங்களில் மீண்டும் சரிவை சந்தித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பங்கு விற்பனை
கடந்த 7 நாட்களில் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்த நிலையில் இன்று உயர்வில் துவங்கிய காரணத்தால் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வெளியேறினர்.
இதன் காரணமாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து சரிவிலேயே பயணித்தது.
ரிசர்வ் வங்கி
மேலும் ரிசர்வ் வங்கி 6வது நாணய கொள்கை கூட்டத்தை முடித்துக் கொண்டு தனது முடிவுகளை வெளியிட்டது.
இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை நுகர்வோர் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு எவ்விதமான மாற்றம் வேண்டாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதனால் வங்கித் துறை முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது
உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப் குறியீடு 0.43 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.95 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 113.23 புள்ளிகள் சரிந்து 34,082.71 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 21.55 புள்ளிகள் சரிந்து 10,476.70 புள்ளிகளை அடைந்தது.
கடந்த 7 நாட்களில் இன்று மிகவும் குறைந்த அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது சென்செக்ஸ்.