இந்திய சந்தையில் ஆம்புஜம் சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவணமங்கலின் இணைப்புக் குறித்துப் பேச்சுவார்த்தை இன்று ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் உயர முக்கியக் காரணமாக அமைந்தது.
மேலும் ரிசர்வ் வங்கி இந்திய வணிக வங்கிகளில் குவித்துக்கிடக்கும் வராக்கடனைத் தீர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்த திட்டமிட்டு வருவதால் வங்கித்துறை பங்குகளில் கணிசமான முதலீடு குவிந்தது.
ஆசிய சந்தை
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவல் மக்ரோன் அவர்களின் வெற்றி ஆசிய சந்தையில் நிலையான வர்த்தகத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சென்செக்ஸ்
இத்தகைய சூழ்நிலையில் துவங்கிய இன்றைய வர்த்தகம் உயர்வில் துவங்கினாலும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பின் 37.35 புள்ளிகள் உயர்வுடன் 29.926.15 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் இன்று உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தக முடிவில் 28.75 புள்ளிகள் உயர்ந்து 9,314.05 புள்ளிகளை அடைந்துள்ளது.
ஜப்பான்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 3 நாள் தொடர் சரிவில் இருந்து ஜப்பான் சந்தை மீண்டு இன்று 0.3 சதவீத உயர்வை அடைந்துள்ளது.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.31 ரூபாயாகத் தொடர்ந்து வலிமையுடன் இருக்கும் காரணத்தால் இந்திய சந்தையில் மிகவும் குறைவான் அன்னிய முதலீட்டை மட்டுமே பெற்று வருகிறது.
இன்றைய மந்தமான வர்த்தகத்திற்கு இதுவும் முக்கியக் காரணம்.