2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,500 புள்ளிகளுக்கும் அதிகமான அளவில் சரிவை சந்தித்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அருண் ஜெட்லி
இதற்கு மத்திய அரசு விதித்த LTCG வரி தான் முக்கியக் காரணம் என்று அனைவரும் பேசி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்றைய வர்த்தகச் சரிவிற்குப் புதிய வரி காரணமில்லை, சர்வதேச சந்தைகளின் மந்தமான நிலைதான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
வரலாறு
நவம்பர் 2016க்கு பின்பு அதிக வர்த்தகச் சரிவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தது. இந்தச் சரிவை கண்டு பல முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைச் செய்யாமல், சந்தையில் இருக்கும் முதலீட்டைக் கூட வெளியில் எடுத்து வருகின்றனர்.
இதுவே இன்றைய சரிவிற்கும் முக்கியக் காரணம்.
சர்வதேச சந்தை
இன்றைய சரிவிற்குச் சர்வதேச சந்தையும் முக்கியக் காரணமாக இருந்தாலும், புதிய வரி பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரையில் சரிந்தாலும், வர்த்தக முடிவில் 309.59 புள்ளிகள் வரையில் சரிந்து 34,757.16 புள்ளிகளை அடைந்திருந்தது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடும் இன்று காலை முதல் தொடர்ந்து சரிவில் இருந்து வர்த்தக முடிவில் 94.05 புள்ளிகள் வரையில் சரிந்து 10,666.55 புள்ளிகளை அடைந்திருந்தது.