சவுதியின் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் உயர்வான வர்த்தகத்தலேயே இருந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை கச்சா எண்ணெய் உயர்வின் மூலம் தொடர்ந்து மந்தமான வர்த்தக்ததை மட்டுமே பதிவு செய்து வருகிறது.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்திலும் சென்செக்ஸ் குறியீடு தட்டுத்தடுமாறி உயர்வான நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவக்கத்திலேயே சரிவுடன் துவங்கி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு எஸ்பிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு சில புள்ளிகள் உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தை
கச்சா எண்ணெய் விலை உயர்விலும் ஐரோப்பிய சந்தையில் இருந்து கணிசமான முதலீடு இந்திய சந்தையில் குவிந்தது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 33,350 வரையில் உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 63.63 புள்ளிகள் உயர்ந்து 33,314.56 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் தட்டுத்தடுமாறி 12.80 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,321.75 புள்ளிகள் அடைந்து இந்த வாரம் வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டில் எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிகளவிலான லாபத்தை அடைந்தது.