அமெரிக்காவை நேரடியாக எதிர்க்க திட்டமிடும் வட கொரியா சமீபத்தில் செய்த அணுகுண்டு சோதனை பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்திலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவை சந்தித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தக சூழ்நிலையின் காரணமாக இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.13 ரூபாயாக குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தை கூடுதலாக பாதித்துள்ளது. இன்றைய வர்த்தக துவக்கம் முதலேயே வர்த்தகம் 150 புள்ளிகள் சரிவடை துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 147.58 புள்ளிகள் சரிந்து 31,661.97 புள்ளிகள் வரை சரிந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 36.00 புள்ளிகள் சரிந்து 9,916.20 புள்ளிகளை அடைந்து.
முக்கிய நிறுவனங்கள்
புதன்கிழமை வர்த்தகத்தில் வர்த்தக முடிவில் கோட்டாக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், கோல் இந்தியா, மாருதி, என்டிபிசி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.