கர்நாடக மாநில தேர்தலில் பிஜேபி கட்சியின் தோல்வி, ஆட்சியைப் பிடிக்க நடந்த கூத்து ஆகியவற்றை இந்தியா முழுவதும் மக்கள் பார்த்த நிலையில், 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் இதே நிலை தான் இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதன் எதிரொலியின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகம் துவங்கும் முதல் தொடர் சரிவைச் சந்தித்தது.
பெட்ரோல், டீசல்
மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி, பொருளாதார, மக்கள் நலன் சார்ந்த பணிகளைச் செய்யாமல் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கத் தலைகீழாக நின்று முயற்சி செய்து தோற்றுப்போனது. கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கிட்டத்தட்ட 15 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வர்த்தகம் மற்றும் நிதிப் பற்றாக்குறை
இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை பெரிய அளவில் பாதிப்பதும் மட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இது பெரிய அளவில் தடையாக இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை
இதன் வாயிலாக இன்று காலை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 232.17 புள்ளிகள் சரிந்து, 34,616.13 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 79.70 புள்ளிகள் சரிந்து 10,516.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ 2.47 சதவீதமும், டிசிஎஸ், கோல் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
மேலும் சன் பார்மா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் 4 சதவீதத்திற்கும் அதிகமான சரிவும், யெஸ் வங்கி 3.27 சதவீதமும், எச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்துள்ளது.
4 வருட ஆட்சி
இதன் மூலம் கடந்த 4 வருடங்களில் மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வியல் ஆகியவை மோசமடைந்தது தவிர, வளர்ச்சி அடையவில்லை. இவை அனைத்தும் தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மத்தியில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications