சென்செக்ஸ் 2023ல் 68,500 அல்லது 80,000 புள்ளிகளை தொடுமா.. மார்கன் ஸ்டான்லி கணிப்பு?

சர்வதேச தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் டிசம்பர் 2023ல் 68,500 புள்ளிகளை எட்டலாம் என கணித்துள்ளது.

இது இன்று 60,682 என்ற லெவலில் காணப்படும் நிலையில், இது இந்த லெவலில் இருந்து 12% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கன் ஸ்டான்லி வளர்ந்து வரும் சந்தையில் ஏற்பட்ட மீட்சியின் மத்தியில், இந்தியாவின் வருமானம் அழுத்தத்தில் காணப்பட்டது. எனினும் பங்கு சந்தையானது கடந்த ஆண்டு சற்றே வருமானம் கொடுத்தது.

 வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள், தொடர்ந்து அதிகமாக உள்ள கமாடிட்டிகளின் விலை, குறிப்பாக எண்ணெய் மற்றும் உரங்கள் விலைக்கு மத்தியில், நாட்டின் வளர்ச்சியில் பெரியளவில் மாற்றம் இல்லை.

இதே அமெரிக்கா ரெசசனுக்குள்ளும் நுழையவிலை. இதற்கிடையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை 6.5% ஆக வைத்துள்ளது. வலுவான உள்கட்டமைப்பு செலவுகள் மூலம் அரசாங்க கொள்கையும் ஆதரவாக உள்ளது. இதுவும் வளர்ச்சியும் அதிகரிக்கலாம்.

சென்செக்ஸ் இலக்கு?

சென்செக்ஸ் இலக்கு?

மார்கன் ஸ்டான்லி இந்த ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை சந்தை சரிவினைக் கண்டால் 52,000 புள்ளிகளை எட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சீனா, கொரியா மற்றும் தைவான் போன்ற சில பெரிய வளர்ந்து வரும் சந்தைகளுக்கான நிலைமைகளை மேம்படுத்தி வருவதன் மூலம், வளர்ந்து வரும் சந்தையில் இந்தியாவை நாங்கள் எடை குறைவாக வைத்துள்ளோம்.

இந்தியா பலனடையலாம்

இந்தியா பலனடையலாம்

கடந்த ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டில் இருந்து இந்தியா பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் நிலவி வரும் அழுத்தமானது இன்னும் சில வாரங்களுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவின் அடிப்படை வளர்ச்சி ஆதாரங்கள் வலுவாக உள்ளன.

சென்செக்ஸ் நிலவரம் எப்படி?

சென்செக்ஸ் நிலவரம் எப்படி?

2022ல் இந்திய சந்தையில் 4% ஆக லாபம் அதிகரித்துள்ள நிலையில், இதே சென்செக்ஸ் நடப்பு ஆண்டில் இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதே இன்டெக்ஸ் பிப்ரவரி 10, 2023ல் இருந்து 60,682.70 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த டிசம்பர் 30, 2022ல் 60,840.74 புள்ளிகளாக இருந்தது.

சந்தையில் தாக்கம் இருக்கலாம்

சந்தையில் தாக்கம் இருக்கலாம்


மார்கன் ஸ்டான்லி கூறுகையில், 2022ம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த செயல்திறனின் தலைமையில் அரசாங்க கொள்கை இருந்தது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு அதிகரிப்பு, அன்னிய முதலீடு அதிகரிப்பு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

மீடியம் டெர்மில் எப்படி?

மீடியம் டெர்மில் எப்படி?

இதற்கிடையில் இன்று இந்திய பங்கு சந்தையானது சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கம், ரெசசன் அச்சம், அமெரிக்காவின் பணவீக்க தரவு, என பலவும் வரவிருக்கும் வாரத்தில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் அன்னிய முதலீடுகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்தியாவை பொறுத்த வரையில் இந்திய சந்தையில் முதலீடுகள் வரத்து, காலாண்டு முடிவுகள் என பலவும் மீடியம் டெர்ம் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அடுத்த வாரம்?

அடுத்த வாரம்?

சந்தை பலவீனமாக இருக்கும் இந்த சமயத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகமாக இருக்கும். இது சந்தையில் ஒரு வலுவான நிலையை ஏற்படுத்தலாம். மேற்கோண்டு காலாண்டு முடிவுகளும் சந்தையில் பிரதிபலிக்கலாம். பல மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஏமாற்றம் அளிக்கின்றன. எனினும் இனி வரவிருக்கும் நாட்களில் இதிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+