மும்பை பங்கு சந்தை கூறியீடான் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியும் தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவை சந்தித்துள்ளன.
இந்திய பங்கு சந்தையில் புதன்கிழமையான இன்று நிதித் துறை பங்குகள் மற்றும் சுகாதாரத் துறை பங்குகள் சரிந்தன அதே நேரம் கொரியன் பெனின்சுலா பகுதி சந்தையில் உயர்வைச் சந்தித்தன.
இன்றைய பங்கு சந்தையின் நிலை
பங்குச் சந்தையின் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 0.68 சதவீதம் அதாவது 216.35 புள்ளிகள் சரிந்து 31,797.84 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.71 சதவீதம் அதாவது 70.50 புள்ளிகள் சரிந்து 9,908.05 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
ஓஎன்ஜிசி (+ 1.13%), என்.டி.பி.சி (+ 1.11%), ஏஷியன் பெயின்ட்ஸ் (+ 0.82%), இன்ஃபோசிஸ் (+ 0.61%) மற்றும் கோடக் வங்கி (+ 0.47%)
நட்டம் அளித்த பங்குகள்
சன் பார்மா (-5.49%), அதானி போர்ட்ஸ் (-4.32%), டாடா மோட்டார்ஸ் (-3.51%), சிபலா (-3.24%) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் (-2.94%)
டொனால்டு டிரம்ப் எச்சரிக்கையின் விளைவு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட கொரியா எங்களுக்கு ஏதேனும் அச்சுரத்தல் ஏற்படுத்துமானால் நேறுப்பும் சதையுமான சிதைந்து போகும் என்றும் கூறிய சில மணி நேரங்களில் பியோங்கியாங் குவாம் பகுதி மீது தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவித்ததை அடுத்து ஆசிய மற்றும் அமெரிக்கப் பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன.