இன்றைய (21/12/2017) பங்கு சந்தை முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சர்வுடன் முடிந்தன. காலை 2ஜி அலைகாற்று ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கில் கனிமொழி, ராசா மற்றும் பிற நிறுவனங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சன் நெட்வொர்க் உள்ளிட்ட சில நிறுவன பங்குகள் நல்ல லாபத்தினை அளித்தன.
இன்றைய சந்தை முடிவு நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.06 சதவீதம் என 21.10 புள்ளிகள் சரிந்து 33,756.28 புள்ளிகளாக வர்த்தகச் செய்யப்பட்டது.
அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.04 சதவீத என 3.90 புள்ளிகள் சரிந்து 10,440.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை சார்ந்த அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் கேப்பிட்டல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் 1.71 சதவீதமும், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவன பங்குகள் 1.28 சதவீதமும், பவர் நிறுவன பங்குகள் 1.22 சதவீதமும், ஹெல்த்கேர் நிறுவன பங்குகள் 0.09 சதவீதமும் உயர்ந்தன.
மறுபக்கம் ஆட்டோ துறை பங்குகள் 0.64 சதவீதமும், எப்எம்சிஜி துறை பங்குகள் 0.26 சதவீதமும், வங்கி துறை பங்குகள் 0.21 சதவீதமும், நுகர்வோர் சாதன துறை பங்குகள் 0.12 சதவீதமும் சரிவை அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
எல்அண்ட்டி (+ 2.01%), ஹீரோ மோட்டோகார்ப் (+ 1.76%), டாடா ஸ்டீல் (+ 1.35%), என்டிபிசி (+ 0.9%) மற்றும் இன்ஃபோசிஸ் (+ 0.81%)
நட்டம் அளித்த பங்குகள்
எம் & எம் (-3.75%), ஆக்சிஸ் வங்கி (-1.39%), மாருதி (-1.24%), எச்யூஎல் (-1.09%), இண்டஸ் இண்டு வங்கி (-0.98%)