ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தையில் முதலீட்டாளர்கள் செய்த கலவையான வர்த்தகத்தினால் சென்செக்ஸ் மற்றும் நிப்டியும் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.
பருவ காலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு அளிக்க அனுமதி அளித்த பிறகு இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பத்திர திட்டங்களின் மதிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. சீனா- அமெரிக்கா இடையில் உள்ள வர்த்தகப் போர் பதற்றத்தினால் சீன நாணய மதிப்பானது 11 மாத சரிவினை சந்தித்துள்ளது.
இன்றைய சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 266.80 புள்ளிகள் என 0.75 சதவீதம் உயர்ந்து 35,645.40 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 70 புள்ளிகள் என 0.65 சதவீதம் உயர்ந்து 10,769.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஆட்டோமொபைல், ஆற்றல், ஹெல்த்கேர், நிதி மற்றும் வங்கி துறை பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன. அதே நேரம் ஐடி, டெக், மின்சாரம் மற்றும் நுகர்வர் சாதன நிறுவனப் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
பஜாஜ் ஆட்டோ, மாருதி, இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎப்சி பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
எண்டிபிசி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், சிப்லா பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.