அமெரிக்க சந்தை உயர்வுடன் முடிந்தாலும் ஆசிய சந்தை இன்றைய வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து சரிவை மட்டுமே பதிவு செய்து வருகிறது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் தொடர்ந்து சரிவு பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனம் மட்டுமே உயர்வுடன் உள்ளது.
இந்த பெரும் சரிவுக்கு முக்கிய காரணம் இன்று அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஜெரோம் பவல் வெளியிட உள்ள முக்கியமான அறிக்கை தான், இந்த அறிக்கையில் நாணய கொள்கையின் தளர்வுகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் கட்டாயம் இருக்கும் என சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.