மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியும் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 15 புள்ளிகள் அதாவது 0.15 சதவீதம் உயர்ந்து 9,786.05 புள்ளிகளாக வர்த்தக நேர முடிவில் இருந்தது. அதே நேரம் இன்று அதிகபட்சமாக 9,829.40 புள்ளிகளைத் தொட்டுப் பார்த்தது.
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 31.45 புள்ளிகள் அதாவது 0.1 சதவீதம் உயர்ந்து சந்தை நேர முடிவில் 31,747.09 புள்ளிகளாக இருந்தது. மேலும் அதிகபட்ச புள்ளிகளான 31,885.11 புள்ளிகளை இன்று சென்செக்ஸ் தொட்டது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி தரவு
முதலீட்டாளர்கள் புதன்கிழமை வெளியாக இருக்கும் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி தரவினை நோக்கிக் காத்திருக்கின்றார்கள்.
லாபம் அளித்த துறை சார்ந்த பங்குகள்
மும்பை பங்குச் சந்தையினைப் பொருத்தவரை ஐடி துறை பங்குகள் 0.91 சதவீதமும், ஆடோமொபைல் துறை பங்குகள் 0.8 சதவீதமும், டெக் துறை பங்குகள் 0.35 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் 0.28 சதவீதமும் உயர்வைப் பெற்றுள்ளன.
சரிந்த துறை சார்ந்த பங்குகள்
அதே நேரம் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1.56 சதவீதமும், இன்ப்ராஸ்டர்க்ச்சர் துறை பங்குகள் 0.72 சதவீதமும், நுகர்வோர் சாதன துறைகளில் பங்குகள் 0.7 சதவீதமும், ஹெல்த்கேர் துறை சார்ந்த பங்குகள் 0.65 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ (+ 2.44%), டாடா மோட்டார்ஸ் (+ 2.28%), என்டிபிசி (+ 1.81%), எம் & எம் (+ 1.77%) மற்றும் இன்ஃபோசிஸ் (+ 1.75%)
சரிவைச் சந்தித்த பங்குகள்
பார்தி ஏர்டெல் (-2.59%), சிப்லா (-2.06%), விப்ரோ (-1.92%), நிலக்கரி இந்தியா (-1.85%) மற்றும் ஓஎன்ஜிசி (-1.54%)