வாரத்தின் இறுதி நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தில் தொடர்ந்து சரிவினையே கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 129.66 புள்ளிகள் ஏற்றம் கண்டு 43,729.62 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 38.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,810 ஆகவும் காணப்பட்டது. இதில் அனைத்து துறை குறியீடுகளும் சற்று பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.

வாரத்தின் இறுதி நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

இது இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு விகிதம் மோசமான சரிவினைக் காணும் என்று கணித்து வந்த நிலையில், தற்போது அதனை மாற்றியமைக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக எஸ்பிஐ இரண்டாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் - 12.5 சதவீதத்தில் இருந்து -10.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளதையே காட்டுகிறது. அதுமட்டும் அல்ல இரண்டாவது காலாண்டில் சற்று சரிவில் காணப்பட்டாலும், மூன்றாவது காலாண்டில் அதனை விட சிற்ப்பாக வளர்ச்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆக இது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்தும், கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகளும், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்கள் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், ஹெச்டிஎஃப்சி. எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், கோல் இந்தியா, யுபிஎல், அதானி போர்ட்ஸ், இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் டைட்டன், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 198 புள்ளிகள் அதிகரித்து 43,792.93 ஆகவும், இதே நிஃப்டி 53.40 புள்ளிகள் அதிகரித்து 12,825.10 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.14 ரூபாயாக சற்றே அதிகரித்து காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, Nifty trade higher in morning session

Market update.. Sensex, Nifty trade higher in morning session
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X