இந்திய சந்தை முடியும் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால் திங்கட்கிழமை சரிவுடன் முடிந்தது, சென்செக்ஸ் 218 புள்ளிகள் சரிந்தது மட்டும் இல்லாமல் நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிந்தது.
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 217.86 புள்ளிகள் என 0.60 சதவீதம் சரிந்து 36,323.77 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 82.05 புள்ளிகள் என 0.74 சதவீதமாக 10,936.85 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் பார்மா, மெட்டல், ஆட்டோ, பொதுத் துறை வங்கி நிறுவனப் பங்குகள் கடைசி நிமிட விற்பனையில் சிக்கி 1 முதல் 4 சதவீதம் வரை சரிந்தது.
லாபம் அளித்த பங்குகள்
என்டிபிசி, இன்போசிஸ், எச்டிஎப்சி, விப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர், யெஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபத்தினை அளித்து இருந்தன.
நட்டம் அளித்த பங்குகள்
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
மொத்த விலை குறியீட்டுப் பணவீக்கம் உயர்வு
உணவுப் பொருட்கள், எண்ணெய் விலை போன்றவற்றால் மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 4.5 வருடம் இல்லாத அளவிற்கு உயர்ந்து மே மாதம் 4.43 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்த விலை குறியீடு 0.90 சதவீதமாக இருந்தது.