அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், இன்று ஆசிய சந்தையும் லாபகரமான வர்த்தகத்திலேயே துவங்கியுள்ளது. மேலும் மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கும் தற்போது சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி அளித்துள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர் உயர்வை நோக்கிப் பயணித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கூடுதலா முதலீடு செய்யதன் மூலம் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
சர்வதேச சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாவ் ஜோன்ஸ் 350 புள்ளிகள் வரையில் அதிகரித்த நிலையில் வர்த்தக முடிவில் 19.42 புள்ளிகள் சரிவடைந்தது.
ஆசிய சந்தையில் ஜப்பான், ஹாங்காங் ஆகிய சந்தைகள் உயர்வை அடைந்த நிலையில், சீன சந்தை 1.84 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
11 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 411.65 புள்ளிகள் உயர்ந்து 34,494.36 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 116.40 புள்ளிகள் 10,593.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கியமான நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ்அண்ட்பி குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன்பார்மா, இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.