சென்செக்ஸ் 29,000 புள்ளிகளைத் தாண்டியது.. காரணம் மோடி..!!

சென்செக்ஸ் 29,000 புள்ளிகளைத் தாண்டியது.. காரணம் மோடி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரத்தின் வர்த்தகம் மந்தமாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 9000 புள்ளிகளையும் அடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி வெற்றிபெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.

சென்செக்ஸ் 29,000 புள்ளிகளைத் தாண்டியது.. காரணம் மோடி..!!

மேலும் உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வருகிற சனிக்கிழமை வெளியாக உள்ளதால், இந்த வார வர்த்தகம் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளைத் தாண்டி இந்திய பங்குச்சந்தை உயர்வடையும் எனத் தெரிகிறது.

மோடியின் வெற்றி, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை முதலீட்டாளர்கள் மிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 215.74 புள்ளிகள் உயர்ந்து 29,048.19 புள்ளிகளை அடைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று தொடர் வர்த்தக உயர்வில் 65.90 புள்ளிகள் உயர்ந்து 8,963.45 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டீர்ஸ் நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex reclaims the 29,000-mark PM Modi is big reason

Sensex reclaims the 29,000-mark PM Modi is big reason
Story first published: Monday, March 6, 2017, 16:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X