தடுமாறினாலும், தலைநிமிர்ந்த சென்செக்ஸ்..! 2020ல் 14 சதவீத வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 25 வருடத்தில், அதாவது 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 3,200 புள்ளிகளில் இருந்து 47055.69 வரையிலான உயர்வை அடைந்துள்ளது.

இக்காலகட்டத்தில் வரும் சராசரியாக 9.2 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்த சென்செக்ஸ் 2020ல் பல்வேறு வர்த்தகத் தடைக்கு மத்தியில் சுமார் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2020ல் அதிக பணத்தை சம்பாதித்தது யார்.. இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்..!2020ல் அதிக பணத்தை சம்பாதித்தது யார்.. இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்..!

2020ல் சென்செக்ஸ்

2020ல் சென்செக்ஸ்

கொரோனா தொற்றுக் காரணமாக 2020 துவக்கத்திலேயே தடுமாற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்த காரணத்தால் அன்னிய முதலீடுகள் இந்தியச் சந்தையில் குறைந்தது. இதனால் பிப்ரவரி மாதம் முதல் துவங்கி சென்செக்ஸ் சரிவு லாக்டவுன் அறிவிப்பு வெளியான போது 41,000 புள்ளிகளில் இருந்து 25,900 புள்ளி வரையில் சரிந்தது.

மார்ச் மாத சரிவின் மூலம் சென்செக்ஸ் குறியீடு சுமார் 4 வருடத்திற்குப் பின்னோக்கி சென்றது.

 

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

இது மட்டும் அல்லாமல் ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், இந்தியப் பொருளாதாரம் வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

மேலும் மார்ச் மாத சரிவில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 85 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் முக்கியமான நிப்டி மிட்கேப் 100 குறியீடு 100 சதவீதமும் மற்றும் நிப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 116 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது.

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்

அமெரிக்கத் தேர்தல் முடிவுக்குப் பின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடி சந்தையாக இந்தியா மாறிய நிலையில், அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 1.41 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. இதில் 2002 முதல் சேகரிக்கப்பட்டு வரும் NDSL தகவல்களின் அதிகப்படியானது.

அதிக லாபமடைந்த துறைகள்

அதிக லாபமடைந்த துறைகள்

2020ல் பார்மா மற்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக NSE பார்மா பங்குகள் 2020ல் 60.56 சதவீதமும், ஐடி பங்குகள் 53 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐடி நிறுவனப் பங்குகள் வளர்ச்சி அடைய முக்கியக் காரணம் ஜூன், செப்டம்பர் காலாண்டில் ஐடி நிறுவனங்கள் வொர்க் பரம் ஹோம்-ஐ சிறப்பான முறையில் பயன்படுத்தித் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தியது. இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் அதிகளலில் முதலீடு செய்தனர்.

 வங்கி, ரியாலிட்டி துறை

வங்கி, ரியாலிட்டி துறை

இதேவேளையில் கொரோனா பாதிப்புக்களை எதிர்கொள்ள முடியாமலும், சரிவிலிருந்து மீண்டு வர முடியாமலும் தவித்து வருகிறது வங்கி மற்றும் ரியாலிட்டி துறை. இன்றளவும் இந்திய வங்கிகள் சுமார் 5.5 சதவீத சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக லாபத்தை அடைந்த 5 நிறுவனங்கள்

அதிக லாபத்தை அடைந்த 5 நிறுவனங்கள்

  • திவி லேப்ஸ் 103% வளர்ச்சி
  • டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 81% வளர்ச்சி
  • சிப்லா 74% வளர்ச்சி
  • இன்போசிஸ் 69% வளர்ச்சி

 

அதிக நஷ்டத்தை எதிர்கொண்ட 4 நிறுவனங்கள்

அதிக நஷ்டத்தை எதிர்கொண்ட 4 நிறுவனங்கள்

  • இன்டஸ்இந்த் வங்கி 44% வீழ்ச்சி
  • கோல் இந்தியா 36% வீழ்ச்சி
  • இந்தியன் ஆயில் 28% வீழ்ச்சி
  • யூபிஎல் 23% வீழ்ச்சி

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex rises 14% despite COVID blow in 2020

Sensex rises 14% despite COVID blow in 2020
Story first published: Saturday, December 26, 2020, 18:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X