மும்பை: புதன்கிழமை அதிகபட்ச சாதனை படைத்த இந்திய பங்குச் சந்தை உலகளாவிய சந்தை கூற்றுகள் பலவீனம் காரணமாக இன்று சிரிவை சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 103.61 புள்ளிகள் அதவது 0.34 சதவீதம் சரிந்து 30,029.74 புள்ளிகளாக இன்று வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 9.70 புள்ளிகள் அதாவது 0.10 சதவீதம் சரிந்து 9,342.15 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
இன்றைச் சந்தையில் ஐடி நிறுவனங்கள் 0.52 சதவீதமும், எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் 0.41 சதவீதம், டெக் நிறுவனப் பங்குகள் 0.4 சதவீதமும் உயர்ந்தன. அதே நேரம் மெட்டல் நிறுவனப் பங்குகள் 1.03 சதவீதமும், நுகர்பொருட்கள் நிறுவனப் பங்குகள் 0.72 சதவீதமும், ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம், ஆடோமொபைல் நிறுவனப் பங்குகள் 0.12 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
இன்றைய டாப் 5 பங்குகள்
கெயில் (+1.18%),டாடா மோட்டார்ஸ் (+ 1.14%), சிபலா (+ 1.11%), இன்ஃபோசிஸ் (+ 1.08%) மற்றும் விப்ரோ (+ 1.04%).
இழப்பைச் சந்தித்த 5 பங்குகள்
லுபின் (-2.48%), ஆக்சிஸ் வங்கி (-2.19%), ஐடிசி (-1.91%), டாடா ஸ்டீல் (-1.87%) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (-1.55%).