ரிசரவ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தால் சென்செக்ஸ் 199 புள்ளிகள் சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-18 ஆம் நிதியாண்டின் 2வது இருமாத நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியது, இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவுடன் வர்த்தகம் துவங்கியது.

 

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் நிஃப்டி குறியீடு 9,700 புள்ளிகளை முதல் முறையாகத் தொட்டாலும், மளமளவென 9,640 புள்ளிகளுக்குத் தொடர்ந்து சரிந்தது.

 
ரிசரவ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தால் சென்செக்ஸ் 199 புள்ளிகள் சரிவு..!

இன்று நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் எதுவும் இருக்காது, தொடர்ந்து 6.25 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மந்தமான வர்த்தகத்திற்குச் சென்றது மும்பை பங்குச்சந்தை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ஆசிய சந்தை வர்த்தகத்தில் மந்தமான வர்த்தக நிலையை உருவாக்கியது. இதனுடன் பிரிட்டன் தேர்தல் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டம் ஆகியவை இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தைச் சரிவிற்குத் தள்ளியது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118.93 புள்ளிகள் சரிந்து 31,190.56 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 37.95 புள்ளிகள் சரிந்து 9,637.15 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex sheds 119 points ahead of RBI policy

Sensex sheds 119 points ahead of RBI policy
Story first published: Tuesday, June 6, 2017, 16:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X