அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதிமாக 69 ரூபாயை தாண்டிய நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக காலை வர்த்தகம் துவங்கும் போதே மந்தமான வர்த்தக சூழ்நிலையில் உருவாகியது.
இதோடு ஜூன் மாதத்திற்கான ஆர்டர் இன்று முடிவடையும் காரணத்தால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 179.47 புள்ளிகள் சரிந்து 35,037.64 புள்ளிகள் எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 82.30 புள்ளிகள் சரிந்து 10,589.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம்ம முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி, மஹிந்திரா, பார்தி ஏர்டெல், கோட்டாக் வங்கி, இன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை அடைந்தது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ரிலையன்ஸ், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்கள் 1.80 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது.