300 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்த சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய சந்தையில் இன்று நிலையான வர்த்தகத்தை அடைந்தாலும், மும்பை பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியே எடுத்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

தொடர் சரிவு

தொடர் சரிவு

உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்று சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.

இதன் காரணமாக இன்று வர்த்தகம் முழுவதும் சரிவிலேயே பயணித்தது.

 

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 286.71 புள்ளிகளை சரிந்து 34,010.76 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 93.20 புள்ளிகள் சரிந்து 10,452.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

 வங்கித்துறை பங்குகள் அதிக பாதிப்பு
 

வங்கித்துறை பங்குகள் அதிக பாதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி குறியீடின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 2.30 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.

அதேபோல் கோட்டாக் வங்கி, இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

 

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

தற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 11,300 கோடி ரூபாய் மோசடி இந்நிறுவன பங்குகளை பாதித்துள்ளது. கடந்த 4 நாள் வர்த்தகத்தில் மட்டும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex slumps 340 points; Nifty drops to 10,440

Sensex slumps 340 points; Nifty drops to 10,440
Story first published: Friday, February 16, 2018, 16:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X