இந்திய வங்கித்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி உள்நாட்டு முதலீட்டாளர்களை மட்டுமல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இருந்தே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை
இன்று ஆசிய சந்தையும் உயர்வான வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் போது மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
வங்கித்துறை பங்குகள்
பொதுவாக மும்பை பங்குச்சந்தையில், வங்கிகள் மீதான முதலீடு அதிகமாகவே இருக்கும். இதில் உள்நாட்டு முதலீட்டாளர்களை விடவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள், இதனாலேயே இந்திய பொருளாதாரத்திற்கு வங்கிகள் முதுகெலும்பு எனக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இன்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 52 வாரச் சரிவு அதாவது 113.10 ரூபாய் அளவு வரையில் சரிவடைந்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளது.
சென்செக்ஸ்
மதியம் 2 மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 346.08 புள்ளிகள் சரிந்து 33,664.68 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 109.15 புள்ளிகள் வரையில் சரிந்து 10,3434.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
முக்கிய வங்கிகள்
இன்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அதேபோல் பாங்க் ஆ பரோடா 6 சதவீதமும், எஸ்பிஐ 3.81 சதவீதமும், பெடரல் வங்கி 3.39 சதவீதமும், இன்டஸ்இன்ட் வங்கி 2.28 சதவீதம் வரையில் சரிந்து வங்கித் துறை முதலீட்டாளர்களுக்கு ரத்த கண்ணீர் வரவைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications