சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் தாக்கத்தினால் வியாழக்கிழமை இந்திய பங்கு சந்தை ரெப்போ வட்டி விகித உயர்வை மீறியும் நட்டத்தினை அடைந்தது.
கடந்த இரண்டு நாட்களாகச் சரிந்து இருந்த மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இன்று லாபம் அளித்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தையில் உள்ள தடுமாற்றம் போன்ற காரணங்கள் வார இறுதியில் பங்கு சந்தையில் என்னவெல்லாம் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று இங்குப் பார்க்கலாம்.
இன்றைய நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 391 புள்ளிகள் என 1.05 சதவீதம் உயர்ந்து 37,566.16 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 116.10 புள்ளிகள் என 1.03 சதவீதம் உயர்ந்து 11,360.80 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் உள்ள அனைத்துத் துறைகளும் லாபத்துடன் முடிவடைந்த நிலையில் வங்கி, நிதி, நுகர்வோர் சாதனம் மற்றும் மெட்டல் துறை பங்குகள் அதிக லாபம் அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் வங்கி, எச்டிஎப்சி பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த நிறுவனங்கள்
டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஏசியன் பெயிண்ட், எச்டிஎப்சி வங்கி, விப்ரோ, இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.