250 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை மாலை வரையில் மந்தமாக இயங்கிய மும்பை பங்குச்சந்தை மதிய நேர வர்த்தகத்தில் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது. இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா வரையில் உயர்ந்து.

அதேபோல் OPEC அமைப்பு தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளை உயர்த்துவதைக் குறித்து ஆலோசனை நடத்த முக்கியமான கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளது.

250 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

இதனால் காரணமாக மதிய நேர வர்த்தகத்தில், ஐரோப்பிய வர்த்தகம் துவங்கிய பின்னர் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, இதன் வாயிலாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கடைசி 1 மணிநேரத்தில் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 257.21 புள்ளிகள் அதிகரித்து 35,689.60 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 80.75 புள்ளிகள் உயர்ந்து 10,821.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, மஹிந்திரா, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐடிசி, ஏசியன் பெயின்ட் ஆகிய நிறுவனங்கள் 1.50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது. இதில் சன் பார்மா 3.91 சதவீதம் என அதிகப்படியான உயர்வை அடைந்தது.

மறுபுறம் ரிலையன்ஸ், கோல் இந்தியா, டிசிஎஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Surges 257 Points, Nifty Settles At 10,822

Sensex Surges 257 Points, Nifty Settles At 10,822
Story first published: Friday, June 22, 2018, 16:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X