இந்திய பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் முதன் முறையாக 33,117 புள்ளிகளைத் தொட்ட புதிய உச்சத்தினைத் தொட்டது. இன்று காலை பங்குச் சந்தை துவங்கிய உடன் 500 புள்ளிகள் வரை உயர்ந்து இந்த உச்சத்தினை அடைந்தது.
ஆனால் இந்த உயர்வு சில மணி நேரங்கள் கூட நீட்டிக்கவில்லை. காலை 10:35 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.73 சதவீதம் அதாவது 236.32 புள்ளிகள் உயர்ந்து 32,844.34 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.45 சதவீதம் அதாவது 48 புள்ளிகள் வரை உயர்ந்து 10,255.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
காரணம்
நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பொதுத் துறை வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி மதிப்பிலான மறு மூலதன திட்டத்தினை அறிவித்ததே இதற்கான காரணமாகும். இன்று பங்கு சந்தைத் துவங்கியதன் முதல் பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 20 முதல் 30 சதவீதம் வரை வளர்ச்சியைக் கண்டுள்ளன.
பஞ்சால் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 31.21 சதவீதம் அதாவது 181.20 புள்ளிகள் உயர்ந்து 181.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா நிறுவனப் பங்குகள் 22.56 சதவீதம் அதாவது 32.30 புள்ளிகள் உயர்ந்து 175.45 ரூபாய் 1 பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா நிறுவன பங்குகள் 21.18 சதவீதம் அதாவது 32.75 புள்ளிகள் உயர்ந்து 175.90 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
யூனியன் பாங்க் ஆப் இந்தியா நிறுவனப் பங்குகள் 21.24 சதவீதம் அதாவது 27.90 புள்ளிகள் உயர்ந்து 159.25 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
கனரா வங்கி
கனரா வங்கி பங்குகள் 19.55 சதவீதம் அதாவது 62.55 புள்ளிகள் உயர்ந்து 379.75 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
நட்டம் அளித்துள்ள பங்குகள்
கோடக் வங்கி (-3.73%), எச்டிஎப்சி வங்கி (-2.94%), எச்டிஎப்சி (-2.21%), ஏஷியன் பெயின்ட்ஸ் (-0.19%) மற்றும் அதானி போர்ட்ஸ் (-0.17%)
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications