46,500-க்கு மேல் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,600-க்கு மேல் வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ் 46,000 மேல் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று சற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் தொடக்கத்திலேயே 177.80 புள்ளிகள் அதிகரித்து, 46,440.97 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 71.10 புள்ளிகள் அதிகரித்து, 13,639 ஆகவும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் 1% மேலான ஏற்றத்திலும், இதே மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றத்தில் உள்ளன.

46,500-க்கு மேல் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,600-க்கு மேல் வர்த்தகம்..!

இதற்கிடையில் சர்வதேச பங்கு சந்தைகள் அனைத்தும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள எம்&எம், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, எஸ் பி ஐ லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், நெஸ்டில், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.

இன்று சர்வதேச சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், இதன் மூலம் சரிந்து போன பொருளாதாரத்தினை விரைவில் மீட்டெடுக்க முடியும். அதோடு ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகளும் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளது. இதுவும் பங்கு சந்தைகளில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.

தொடந்து அன்னிய முதலீடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதே நேரம் உள்நாட்டு முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் சந்தை இன்று மீண்டும் ஏற்றத்தினை காண ஆரம்பித்துள்ளது.
.
தற்போது சென்செக்ஸ் 261 புள்ளிகள் அதிகரித்து 46,524 ஆகவும், இதே நிஃப்டி 71 புள்ளிகள் அதிகரித்து, 13,639 ஆகவும் காணப்படுகிறது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் 17 அதிகரித்து 73.47 ரூபாயாக காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex trade above 46,500, nifty above 13,600

Market update.. Sensex trade above 46,500, nifty above 13,600
Story first published: Wednesday, December 16, 2020, 10:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X