நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 401.93 புள்ளிகள் அதிகரித்து, 50,251.77 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 196 புள்ளிகள் அதிகரித்து, 14,957.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 296.31 புள்ளிகள் அதிகரித்து, 50,146.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 87.80 புள்ளிகள் அதிகரித்து, 14,849.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1021 பங்குகள் ஏற்றத்திலும், 249 பங்குகள் சரிந்தும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ் கிட்டதட்ட 2% ஏற்றத்திலும் மற்றவை 1% வரையிலும் காணப்படுகின்றன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், என்டிபிசி, ஐஓசி, டெக் மகேந்திரா, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி, ஈச்சர் மோட்டார்ஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்டிபிசி, எம்&எம், டெக் மகேந்திரா, டெக் மகேந்திரா, எம்&எம், பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா அதிகரித்து 73.35 ரூபாயாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.55 ரூபாயாக இருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவி நேர்மறையான ஏற்றத்தில் உள்ள நிலையில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் 10 வருட பத்திர லாபமானது வலுவாக காணப்படும் நிலையில், டாலரின் மதிப்பு சற்று வலுவாக உள்ள நிலையில், சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தைகள் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 473.17 புள்ளிகள் அதிகரித்து, 50,323.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 143.20 புள்ளிகள் அதிகரித்து, 14,904.20 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.