நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கி, பிறகு சரிவினைக் கண்டு, அதன் பின்னர் தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
சந்தையில் அதிகளவிலான ஏற்றத்திற்கு மத்தியிலும் நல்ல விஷயம் என்னவெனில், சென்செக்ஸ் 51,000 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகி வருகின்றது.
இது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகளும் சாதகமாக வெளியாகிக் கொண்டுள்ளன.
அதோடு பல சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் தற்போது முதலீட்டாளார்களுக்கும், வர்த்தகர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வர்த்தகமாகி வருகின்றது.
கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும், இந்திய பங்கு சந்தையில், இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த டேட்டா இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவும் கவனிக்கதக்க விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்கிடையில் இந்த வாரத்தில் இன்னும் இந்த ஏற்ற இறக்கம் தொடரலாம் என்ற நிலையே இருந்த வருகின்றது.
தற்போது சென்செக்ஸ் 380.45 புள்ளிகள் அதிகரித்து, 51,017.98 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 91.75 புள்ளிகள் அதிகரித்து, 15,300.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.