கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்றும், புதிய வரலாற்று உச்சத்தில் தொடங்கியுள்ளது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 163.73 புள்ளிகள் அதிகரித்து, 44,213.88 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் அதிகரித்து 12,974.50 ஆகவும் இருந்துள்ளது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 392.83 புள்ளிகள் அதிகரித்து 44,469.98 ஆகவும், இதே நிஃப்டி 114 புள்ளிகள் அதிகரித்து, 13,040.50 ஆகவும் காணப்பட்டது. இதில் 1421 பங்குகள் ஏற்றத்திலும், 717 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
ஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம்
இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் இதுவரையில் 50,207.35 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு முதலீடுகள் சரிவு
அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்துள்ளது. சொல்லப்போனால் நவம்பர் 23 நிலவரப்படி -35,587.73 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. ஆனால் அக்டோபர் மாதத்தில் 17,318.44 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியது கவனிக்கதக்கது. இது சந்தை புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் செய்துள்ளதால் வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், பிஎஸ்இ ஆயில் & கேஸ் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ள நிலையில், மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது. நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ்,
ஈச்சர் மோட்டார்ஸ், எம் & எம், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், இந்தஸ்இந்த் வங்கி, கெயில், ஜேஎஸ் டபள்யூ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் எம் & எம், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 340 புள்ளிகள் அதிகரித்து, 44417.54 ஆகவும், இதே நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து, 13,021.80 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமில்லாமல் 74.11 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதே முந்தைய அமர்வில் 74.09 ரூபாயாக முடிவடைந்தது கவனிக்கதக்கது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications