வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பலத்த சரிவுக்கு பிறகு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்களாகவே தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்று சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளன.
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 100.69 புள்ளிகள் குறைந்து, 49,845.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.50 புள்ளிகள் அதிகரித்து 14,721.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
சந்தை தொடக்கம்
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 225.67 புள்ளிகள் அதிகரித்து 49,969.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 68.30 புள்ளிகள் அதிகரித்து 14,744 புள்ளிகளாகவும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 1,032 பங்குகள் ஏற்றத்திலும், 265 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் சில குறியீட்டில், நிஃப்டி ஆட்டோ தவிர, பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், கெயில், பிபிசிஎல், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, லார்சன், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 29.13 புள்ளிகள் அதிகரித்து, 49,773.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17 புள்ளிகள் அதிகரித்து, 14,692.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. பொருளாதாரம் மீண்டு வரலாம் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் சில சர்வதேச துறை சார்ந்த செய்திகள் பலவற்றையும் கண்கானிக்க வேண்டும். அதோடு அதிகரித்து வரும் பத்திர சந்தையும் கவனிக்கதக்க ஒரு விஷயமாகும்.