400 புள்ளிகள் சரிவில் துவங்கிய சென்செக்ஸ்.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தையின் சென்சென்ஸ் குறியீடு 4 நாட்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து வந்த நிலையில் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கும் போத 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் துவங்கி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருப்பது ஆசியச் சந்தையில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சியும், திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையில் பதிவான சரிவும் தான்.

 சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தகம் நிறைவடையும் போது 49,502.41 புள்ளிகளை அடைந்த நிலையில், இன்று வர்த்தகம் துவங்கும் போது சுமார் 440 புள்ளிகள் சரிவுடன் 49,066.45 புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது.

தொடர்ந்து தடுமாற்றங்கள் உடன் வர்த்தகமாகி வரும் சென்செக்ஸ் குறியீடு 48,988.18 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 180 புள்ளிகள் வரையில் சரிந்து 14,771.40 புள்ளிகள் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 ஆசிய சந்தை வீழ்ச்சி

ஆசிய சந்தை வீழ்ச்சி

இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே ஆசிய சந்தை சரிவுடன் துவங்கியதன் எதிரொலி இந்தியச் சந்தையைப் பாதித்துள்ளது. தைவான் 3.36 சதவீதம், ஜப்பான் 3 சதவீதம், ஆஸ்திரேலியா 1.25 சதவீதம், ஹாங்காங் மற்றும் சீனா 0.27 சதவீதம் என ஆசிய சந்தை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

Array
 

Array

இதேபோல் திங்கட்கிழமை வர்த்தகத்தில் வட மற்றும் தென் அமெரிக்கச் சந்தையில் பெருமளவிலான பாதிப்புகள் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாக அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் 0.71 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.06 சதவீதமும் சரிந்த காரணத்தால் தான் ஆசிய சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.

 அமெரிக்கப் பங்குச்சந்தைகள்

அமெரிக்கப் பங்குச்சந்தைகள்

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை அடுத்த சில காலாண்டுகளுக்கு உயர்த்தாது எனக் கூறிய காரணத்தால் டாவ் ஜோன்ஸ் புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால் இதேவேளையில் S&P500 குறியீட்டில் முதலீட்டாளர்கள் டெக் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து விட்டு எனர்ஜி மற்றும் மெட்டிரியல் பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

 கச்சா எண்ணெய் பைப்லைன் நிறுவனம்

கச்சா எண்ணெய் பைப்லைன் நிறுவனம்

முதலீட்டாளர்கள் எனர்ஜி மற்றும் மெட்டிரியல் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யக் காரணம், அமெரிக்காவின் முன்னணி கச்சா எண்ணெய் பைப்லைன் நிறுவனம் சைபர் அட்டாக்-கிற்குப் பின் மீண்டும் தனது பணிகளைத் துவங்க உள்ளதாக அறிவித்த காரணத்தால் WTI கச்சா எண்ணெய் விலையும் உயர துவங்கியது.

 அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தை

அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தை

அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சி இந்திய சந்தைகளை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை. இதன் வாயிலாகவே இன்று 430 புள்ளிகள் சரிவில் துவங்கி 380 புள்ளிகள் சரிவில் தடுமாறிக் கொண்டு வருகிறது சென்செக்ஸ்.

 டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்டிஎப்சி, கோட்டார் வங்கி ஆகிய இரு நிறுவனங்களும் 2.2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி, டைட்டன், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Tumbles Over 400 Points, What is the reason behind the fall?

Sensex Tumbles Over 400 Points, What is the reason behind the fall?
Story first published: Tuesday, May 11, 2021, 11:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X