அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மார்ச் 2024 க்குள் முதல் வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும், 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 3 முறை வட்டி விகிதத்தை குறைக்கும் என அறிவிப்பு வெளியானதில் இருந்து சர்வதேச பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இன்று காலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாக 71000 புள்ளிகளை தொட்டது. ஆனால் இந்திய பங்குச்சந்தையில் குவியும் முதலீடுகள் இதோடு நிற்கவில்லை.

மதிய வர்த்தகத்தில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச சந்தை தாக்கத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கலை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்றை வர்த்தகம் வங்கி, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளால் அதிகளவிலான உயர்வை தொட்டு உள்ளது. இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1000 புள்ளிகள் உயர்ந்தது மாலை வர்த்தகத்தில் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
இதன் மூலம் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு வெள்ளிக்கிழமை ரூ.2.76 லட்சம் கோடி உயர்ந்து ரூ.357.78 லட்சம் கோடி அளவீட்டை தொட்டது. இதேபோல் இந்த வாரம் மட்டும் மொத்த சந்தை மூலதனத்தில் ரூ.8.55 லட்சம் கோடியும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 969.55 புள்ளிகள் உயர்ந்து 71,483.75 புள்ளிகளை எட்டியுள்ளது, இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக இன்று 71,605.76 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 273.95 புள்ளிகள் உயர்ந்து 21,456.65 புள்ளிகளை எட்டியிருக்கும் வேளையில் அதிகப்படியாக 21,492.30 புள்ளிகளை தொட்டது.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications