டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையும் (ஏப்ரல் 14) மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. ஆகையால் இந்த வாரம் மொத்தம் 3 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையிலான கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தைகள் கடும் ஏற்றத்தை சந்தித்தன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நான்கே தினங்களில் 4,700 புள்ளிகள் உயர்ந்தது. பரஸ்பர வரி நிறுத்தி வைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன. தற்போதைய சூழ்நிலையில், பங்குகளில் முதலீடு செய்யலாமா என்ற சந்தேகத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடங்கி விட்டது என்று பிரபல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்கேபி செக்யூரிட்டீஸின் ரூபாக் தேக் கூறுகையில், பங்குச் சந்தைகளின் சமீபத்திய நகர்வு "fast and furious". சில தின வர்த்தக தினங்களில் நிஃப்டி சுமார் 10 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. என்னை பொறுத்தவரை ஒட்டு மொத்த உணர்வும் மிகவும் நேர்மறையாக தெரிகிறது. நிஃப்டி 23,300க்கு மேல் இருக்கும் வரை சந்தை 24,100ஐ நோக்கி நகரக் கூடும். 24,500ஐ தொடக்கூடும். பங்கு விலை குறையும் போது வாங்க வேண்டும் (பை ஆன் டிப்ஸ்) என்பதுதான் வர்த்தகத்துக்கான உத்தி என்று தெரிவித்தார்.
பிரபல சுயாதீன பங்குச் சந்தை ஆலோசகர் சந்தீப் சபர்வால் கூறுகையில், பங்குச் சந்தையின் தற்போதைய ஏற்றம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. சந்தைகள் ஏற்றம் காண தொடங்கும்போது,சில நேரங்களில் வேகத்தை கணிப்பது மிகவும் கடினம். பெரிய ஏற்ற இறக்க நகர்வுகளில் இதேபோன்ற கணிக்க முடியாத தன்மை ஏற்படும்.
பணவீக்கம் குறைந்து வருவது, நிதிக்கொள்கை ஆதரவாக உள்ளது, அரசாங்க செலவினங்களில் அதிகரிப்பு மற்றும் சமீபத்திய பட்ஜெட்டில் வரி மாற்றம் காரணமாக அதிக செலவழிக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றுடன் இந்தியாவுக்கு பெரிய பொருளாதார வாரியான விஷயங்கள் நன்றாக உள்ளன. அதிகப்படியான எதிர்மறையான பார்வையால் சந்தைகள் சுமையாக இருந்தது, இப்போது அந்த அவநம்பிக்கை விரைவாக களையப்படுகிறது என்று தெரிவித்தார்.
சைகல் கேபிட்டலின் அன்ஷுல் சைகல் கூறுகையில், அடிப்படை வணிக அடிப்படைகள் வலுவாக உள்ளன. ஒரு சரிவு ஏற்பட்டால், அது மிகவும் வலுவான நீண்டகால போக்கில் ஒரு சறுக்கல் மட்டுமே. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். அந்த நம்பிக்கையில் சில ஏற்கனவே கடந்த 40-45 நாட்களில் சந்தைகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளன. சரியான பங்குகளை தேர்ந்தெடுக்கக் கூடிய முதலீட்டாளர்களுக்கு அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் அர்த்தமுள்ள லாபங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
ரூ.1 லட்சத்துக்கு ரூ.1 கோடி... முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 4 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications