இத்தாலி நாட்டின் நிலவிய அரசியல் பிரச்சனைகள் சீரடைந்து வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தையில் இன்று அன்னிய முதலீட்டின் அளவு சற்று அதிகமாக இருந்தது. இதுமட்டும் அல்லாமல் இன்று மே மாத ஆர்டர்கள் முடியும் நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகமாக இருந்த காரணத்தால் காலை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியது.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 416.27 புள்ளிகள் உயர்ந்து 35,322.38 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 121.80 புள்ளிகள் உயர்வில் 10,736.15 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்று அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி வங்கி ஆகியவை 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்திருந்தது, இதேபோல் இண்டஸ்இந்த் வங்கி, மஹிந்திரா ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோட்டாக் வங்கி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்தது.
மேலும் டிசிஎஸ், மாருதி, டாக்டர் ரெட்டி, ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா ஆகியவை சரிவை சந்தித்தது.