வியாழக்கிழமை நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாத கொள்கையில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தாலும், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தைத் தொடர்ந்து குறைவாகவே வைத்திருக்கத் திட்டமிட்டுள்ள ரிசர்வ் வங்கி வட்டி விகித்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் இன்று சீனா-அமெரிக்கப் பிரச்சனைகளைத் தாண்டி மும்பை பங்குச்சந்தையில் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் வட்டி விகிதம் இருக்காது எனக் கணிக்கப்பட்டு வந்த நிலையில், காலை முதலே அதிகளவிலான முதலீடு இந்திய சந்தையில் குவிந்தது.
ரிசர்வ் வங்கியின் இன்றை முடிவுகளும் கணிப்பை போலேவே சாதகமாக இருந்த காரணத்தால் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குச் சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கி முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர முக்கிய உந்து சக்தியாக இருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 577.73 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 196.75 புள்ளிகள் உயர்ந்து 10,325.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ 4.66 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியை அடைந்திருந்தது. டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications