இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் ஆர்பிஐ-ன் நாணய கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு 0.35 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்தன.
வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடன்வட்டி (ரெப்போ) 6.25 சதவீதமாகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்ஈ
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.26 சதவீதம் அதாவது 80.72 புள்ளிகள் உயர்ந்து 31,271.28 புள்ளிகளாக இருந்தது.
என்எஸ்ஈ
தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.28 சதவீதம் அதாவது 26.75 சதவீதம் அதிகரித்து 9,663.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இன்று அதிகப் பட்சமாக 9,700 புள்ளிகள் வரை உச்சத்தைத் தொட்டுப் பார்த்தது.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ஐஐஎபெல் ஹோல்டின்ஸ் நிறுவனம் இன்று 10.20 சதவீதமும், காட்லியா ஹெல்த்கேர் 9.55 சதவீதமும், எடவிஸ் ஃபினான்ஷியல் சர்வீசஸ் 6.26 சதவீதமும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபினான்ஸ் நிறுவனம் 5.19 சதவீதமும், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் பங்குகள் 4.11 சதவீதம் வரை உயர்வை அளித்துள்ளன.
நட்டம் அடைந்த நிறுவனப் பங்குகள்
ஹெக்சாவேர் நிறுவனப் பங்குகள் 5.22 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடட் நிறுவனப் பங்குகள் 5.00 சதவீதமும், வீடியோகான் இண்டஸ்டரிஸ் நிறுவனப் பங்குகள் 4.96 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.73 சதவீதமும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகள் 3.21 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.