மும்பை: இந்திய பங்குசந்தையில் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்கள் பெரிய திருத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக நேற்றைய தினம் ஸ்மால் கேப் பங்குகள் 5% வரை சரிவைக் கண்டன முதலீட்டாளர்கள் பல லட்சங்களை இழக்க நேரிட்டது.
இந்த சூழலில் இன்றைய தினம் ஸ்மால் கேப் பங்குகள் 3% வரை மீண்டு வந்துள்ளன. எனவே ஸ்மால் கேப் பங்குகளின் போக்கு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சந்தை மூலதனம் 5000 கோடி வரை இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஸ்மால் கேப் பங்குகள் என அழைக்கப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் நிறுவனங்கள் அண்மை காலமாக நல்ல வளர்ச்சியை பெற்றன. ஐபிஓ வெளியீட்டில் கூட ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் லாபத்தை ஈட்டின.
ஆனால், மதிப்பீடுகளை தாண்டி ஸ்மால் கேப் பங்குகள் செல்வது குறித்து செபி தலைவர் எச்சரிக்கை விடுத்தார். ஸ்மால் கேப் பங்குகளின் அதிகப்படியான வளர்ச்சி என்பது ஆபத்தானது, இதனை சரி செய்ய ஒழுங்குமுறைகளை மாற்ற இருப்பதாகவும் செபி தலைவர் கூறி இருந்தார்.
ஸ்மால் கேப் பங்குகள் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்களின் முதலீட்டு போக்கை மாற்றின. இதனால் ஏற்பட்ட அச்சத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்மால் கேப் பங்குகளை விற்பனை செய்தனர். இந்த அழுத்தம் காரணமாக நேற்று (மார்ச்14) பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
ஸ்மால் கேப் பங்குகளின் குறியீடு கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 80 பில்லியன் டாலருக்கு சந்தை மதிப்பை இழந்தது, இதற்கு முக்கியமான காரணம் செபி தலைவரின் எச்சரிக்கை மட்டுமே. பெரும் முதலீட்டாளர்கள் முதல் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் ஆபத்து உள்ள ஸ்மால் கேப் பங்குகளில் இருந்து முதலீட்டை வெளியேற்றினர்.
இதன் விளைவு எம்எஸ்சிஐ இந்தியா குறியீடு ஆசியாவை விட பின் தங்கியது, பல ஆண்டுகளாக படிப்படியாக ஏற்றம் கண்ட இந்தியாவின் எம்எஸ்சிஐ குறியீடு ஒரே நாளில் சரிவை கண்டது. இது இந்திய பங்குச்சந்தையின் செயல்திறனை குறைத்துவிட்டதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்திய சந்தை மீது நம்பிக்கை குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிக மதிப்புள்ள பெரிய பங்குகளில் இருந்தும் பணத்தை எடுக்க தொடங்கியுள்ளனர். எனவே இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்மால் கேப் பங்குகளுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இந்தியாவில் மதிப்பீட்டு நடைமுறைக்கு சாட்சி என ப்ளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் நிறுவன ஆலோசகர் நிதின் சந்துகா கூறியுள்ளார். கடந்த ஆண்டில் ஸ்மால் கேப் பங்குகளில் கிடைத்த வளர்ச்சியை அடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் கூட ஸ்மால் கேப் பங்குகளை முதலீட்டு வாய்ப்பாக மாற்றின.
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் திருத்தம் காரணமாக அவர்கள் பங்குகளை விற்பதற்கான வாய்ப்புள்ளதால் ஸ்மால் கேப் பங்குகள் சரியும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்தி நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் யோசனை கூறுகின்றனர்.
இது போன்ற திருத்தங்கள் இந்திய பங்குச்சந்தையின் தரத்தை உயர்த்தும் என்றும் கூறுகின்றனர். சர்வதேச பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஜெஃபிரீஸ் இது ஆரோக்கியமானது என கருத்து தெரிவித்துள்ளது. இதனை பெரிய சரிவாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் கருத்து கூறியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications