பங்குச் சந்தைகளில் ஒருவர் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். நிறுவனம் வளர்ச்சி அடையும் போது பங்கின் விலை உயரும் அதன் மூலம் லாபம் பார்க்கலாம்.
சில நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கும். இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் லாபமாகும். தற்போது ஸ்மால்கேப் நிறுவனம் ஒன்று விரைவில் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனஸ் பங்கு வழங்க இருக்கும் சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பல்முகப்படுத்தப்பட்ட குழுமமான சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் 1993ல் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் புரோக்கிங் மற்றும் விநியோகம், முதலீட்டு வங்கி, வணிக ஆலோசனைக்கான நிதி சேவைகள், அரசு ஆணையங்கள் மற்றும் இதர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை இணக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிதி சேவைகள், ரீடெயில் கடன் விநியோகம், மியூச்சுவல் பண்ட் விநியோகம், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிற துணை சேவைகளை வழங்குகிறது.
பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான மதுசூதன் முரில்தர் கேலா இந்நிறுவனத்தில் கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனத்தின் 12.06 சதவீத பங்குகளை அவர் வைத்துள்ளார்.
ஸ்மால்கேப் பங்கான சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாப பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.12.95 கோடியும், நிகர லாபமாக ரூ.2.29 கோடியும் ஈட்டியுள்ளது.
இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டில் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு வழங்கியது.
இந்நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்க வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்கு விலை புதிய 52 வார உயர்வான ரூ.544.00ஐ எட்டியது.
சாய்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் வரும் திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈக்விட்டி பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் அறிவிப்பதற்கான முன்மொழிவை பரிசீலிக்கவும், பரிந்துரைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
போனஸ் பங்குகள் வழங்குவது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மால்கேப் பங்கு 2022 டிசம்பர் முதல் இதுவரையிலான காலத்தில் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 118 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications